Special Episode Of Colors Sunday Kondattam

சர்பத் திரைப்படத்தின் நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி

விளம்பரங்கள்

இன்னும் விறுவிறுப்பானதாக மாறும் கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்! சர்பத் திரைப்படத்தின் நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி

Special Episode Of Colors Sunday Kondattam
Special Episode Of Colors Sunday Kondattam

கலர்ஸ் தமிழின் பிரபலமான நெடுந்தொடர்களின் நட்சத்திரங்கள் பங்கேற்ற நிகழ்வுகளின் மூலம் பார்வையாளர்களை ஆனந்தத்தில் ஆழ்த்திய கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் (CSK), இப்போது புத்துணர்வூட்டும் ஒரு புதிய பாதையில் பயணிக்க இருக்கிறது.

ஒவ்வொரு ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சியையும் கொண்டாட்டங்களாக மாற்றவிருக்கும் சிஎஸ்கே இனி வரவிருக்கும் எபிசோடுகளில், கேளிக்கை நிகழ்வுகள் மற்றும் கேம்ஸ்களில் பல பிரபல ஆளுமைகளையும், நட்சத்திரங்களையும் பங்கேற்குமாறு செய்திருக்கிறது. இதன்மூலம், மக்கள் மனதில் சிறப்பான இடம் பிடித்திருக்கும் கலர்ஸ் சண்டே கொண்டாட்டம், இன்னும் கூடுதல் குதூகலமானதாக புதிய அவதாரம் எடுக்கப்போகிறது. இப்புதிய பயணத்தை தொடங்கும் வகையில், வரும் ஞாயிறு ஏப்ரல் 4 ஆம் தேதியன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் சர்பத் திரைப்படத்தின் நடிகர்களும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் மகிழ்ச்சியூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ரசிகர்கள் கண்டு மகிழலாம்.

விளம்பரங்கள்

பல பிரபலங்களை ஒன்றாக இணைத்திருக்கும் இந்த ஞாயிற்றுக்கிழமை எபிசோடு, இசை, நடனம் மற்றும் கேம்ஸ்கள் ஆகிய மூன்று பிரிவுகளின் நேர்த்தியான சங்கமமாக இருக்கும். பிரபல இசையமைப்பாளர் ஆஜீஸ் மற்றும் பின்னணி பாடகர்களான திவாகர், ஹரிச்சரண் மற்றும் மகாலிங்கம் ஆகியோரின் கலகலப்பான, மெய்மறக்கச் செய்யும் நிகழ்ச்சிகளினால் இந்த அரங்கமே அதிரப்போகிறது. இந்த திரைப்படத்திலிருந்து மனதை வருடும் மற்றும் நடனமாடச் செய்யும் அற்புதமான பாடல்களை அவர்கள் இந்நிகழ்ச்சியில் வழங்கவிருக்கின்றனர். இத்திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களான நடிகர் கதிர் மற்றும் நடிகை ரகசியா ஆகியோரும் அதன்பிறகு இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதோடு, ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடி மகிழ்விக்கப் போகின்றனர்.

தனது ரசிகர்களிடமிருந்து ஒரு வியப்பினை நடிகர் கதிர் பெறுவது, இந்த நிகழ்ச்சியை இன்னும் சுவாரஸ்யமானதாக மாற்றிவிடும். அதுமட்டுமல்ல; இத்திரைப்படத்தின் உருவாக்கம் குறித்த பல ஆர்வமூட்டும் துணுக்குகளை இந்நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்வதன் மூலம் இத்திரைப்படத்தின் இயக்குனர் பிரபாகரன் விறுவிறுப்பை இன்னும் அதிகமாக்குவார் என்பது நிச்சயம். பார்வையாளர்களுக்கு முழுமையான திருப்தியும், உற்சாக கொண்டாட்டமும் கிடைக்கும் என்பது உறுதி.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *