பகல் நிலவு – இந்த தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது
ஆண்டாள் அழகர் தொடர்கதையின் அடித்த அத்யாயமாய் , அடுத்த தலைமுறையினரின் கதையக தொடங்கியது பகல் நிலவு தொடர். தற்பொழுது இந்த தொடர் 400 அத்தியாயங்களை கடந்துவிட்டது. இந்த தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இரண்டு குடும்பங்களுக்கு இடையே உள்ள பிரச்சனை தான் இந்த கதையின் மையக் கரு. சென்ற தலைமுறையின் நட்பை காதல் உடைத்ததால். இரு குடும்பத்தினரின் தலைமுறையும் அவர்களுக்குள் காதல் கல்யாணம் என்ற விஷயத்தை தவிர்க்க முயன்றனர். ஆனால் விதியின் முடிவு வேறாக இருந்தது தற்பொழுது இந்த இத்தொடரில் பிரபா மற்றும் ஷக்தி திருமணம் சக்திக்கு திருமணம் ஆகிவிட்டது. பல்வேறு சூழ்நிலை காரணமாக பிரிந்தவர்கள் தற்பொழுது இருவரும் குடும்பத்தினர் மத்தியில் ஒரு வழியாக திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையில் பிரபாவின் தாய் மலர் அவர்களின் கல்யாணத்தில் உடன்பாடு இல்லை என்றாலும். சினேகா மீது வெறுப்பை காட்ட தொடங்குகிறார். தன் மகனை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று நினைத்தார் ஆனால், என்ன தான் சினேகா பிரபாவையும் ஷக்தியையும் சேர்க்கும் நல்ல எண்ணத்தில் நாடகம் செய்திருந்தாலும் மலருக்கு அவர் மீது வெறுப்பும் கோபமும் உண்டாக்கியுள்ளது.
மேலும், அதே குடும்பத்தை சேர்ந்த மற்றொரு ஜோடியான ரேவதி மற்றும் கார்த்திக், தங்களுக்குள் இருக்கும் காதலை குடும்பம் காரணமாக வெளிக்காட்டாமல் இருக்கின்றனர். அவர்களின் காதல் கல்யாணமாகி வெற்றி பெறுமா?
இந்த தொடரில் பிரபுவாக சயீத் அன்வரும், கார்த்திக்காக விக்னேஷ் கார்த்திக்கும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் சக்தியாக சமீரா செரீப் மற்றும் ரேவதியாக சூப்பர் சிங்கர் பிரபலம் சௌந்தர்யாவும் நடிக்கின்றனர். இப்படி அடுத்த கட்டத்தை நோக்கி கதை நகர்கிறது.